தற்போதைய எரிபொருள் நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இம்மாதம் 23ஆம் தேதி பெட்ரோல் டேங்கர் ஒன்றும், 24ஆம் தேதி டீசல் கப்பல் ஒன்றும் வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தற்போதுள்ள நெரிசல் 100 வீதம் இல்லாவிட்டாலும் ஓரளவு குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாயம், மீன்பிடி போன்றவற்றுக்கு ரேஷன் முறை மூலம் முன்னுரிமை வழங்குவதன் மூலம் நெருக்கடியை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றாலும், எரிபொருள் குவிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார்.