எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக தேங்காய் எண்ணெயிலிருந்து பயோடீசலை உற்பத்தி செய்த இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாணந்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய திலின தக்ஷிலா என்பவரை பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த இளைஞரால் உற்பத்தி செய்யப்பட்ட பயோடீசலின் மாதிரிகளை விஞ்ஞான ரீதியான விசாரணைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.