ரட்ட சேனாரத்ன என்றழைக்கப்படும் ‘ரட்ட’, வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் இன்று (22) காலை மருதானை பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிமன்றம் பொலிஸாரும் வழங்கிய உத்தரவை அடுத்து பொலிஸில் சரணடைந்துள்ளனர்.