எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடவுச்சீட்டு பெறுவதற்கு தினந்தோறும் திணைக்களத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதே இதற்குக் காரணம்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போதுள்ள தேவைகளை இனங்கண்டு ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தினமும் இரண்டு ஷிப்டுகளாக துறை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரவுப் பணி நிறைவடைந்து வீடு திரும்புவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் ஷிப்ட் முறையை அமுல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இரவு பணியை முடித்து வீடு திரும்பும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குக்கின்றது.
எவ்வாறாயினும், திணைக்களத்தின் வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.