எதிர்காலத்தில் புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என இலங்கை புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்துள்ளார்.
சிங்கள நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பஸ் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 50 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பு இருக்கும் என தெரிவித்தார்.
தற்போது கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஓட்டப்பந்தய வீரர் பண்டுக ஸ்வர்ணஹன்சவும் கலந்துகொண்டிருந்தார்.