இன்று அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை ரூ. 550 ஆகவும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை ரூபா 470 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் புதிய விலை 460 ரூபாவாகும் அதேவேளை சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை ரூபா. 520 ஆகும்.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 50 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை ரூ. 100, லங்கா ஆட்டோ டீசல் லீற்றர் ரூ.60 மற்றும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ரூ. 75 அதிகரித்துள்ளது.