நாளை (27) முதல் ஜூலை 3ம் திகதி வரை 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
குழு, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளில் நண்பகள் நேரங்களில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும்.
கொழும்பு மாநகரப் பகுதியில் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அறிவிக்கப்படும்.
இதேவேளை, M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு எதிர்வரும் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளை தவிர்த்து காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.