உள்ளூர் அரிசிக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்குமாறு நெல் ஆலை உரிமையாளர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நுகர்வோர் தேவையில்லாமல் அரிசியை பதுக்கி வைக்காவிட்டால், 7 மாதங்களுக்கு அரிசி கையிருப்பு நாட்டில் இருக்கும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எவ்வாறாயினும், தற்போது நிலைமை சீரடைந்து வருவதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.