(எம்.என்.எம்.அப்ராஸ்)
நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய அம்பாரை மாவட்டம் கல்முனை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களை இராணுவத்தினரால் பதிவு செய்யப்பட்டடு எரிபொருளுக்கான‘ டோக்கன்’ வழங்கப்பட்டது.
நேற்று(26) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடளாவிய ரீதியில் டோக்கன்’ முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.