நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வீடுகளில் எரிபொருளை சேமித்து வைக்க ஆசைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஆபத்தான காரணியாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நாட்களில் தீக்காயங்களுக்கு உள்ளானவர்களில் அதிகமானோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதனால் பலர் இவ்வாறான எரிபொருள் சேமிப்பில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய பயிற்சி அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார்.
அபாயகரமான சூழ்நிலை காரணமாக வீடுகளில் எரிபொருளை சேமித்து வைக்க வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய பயிற்சி அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்சா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீப நாட்களாக பல இடங்களில் வீடுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.