கத்தார் அமீரின் அழைப்பின் பேரில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் எண்ணெய் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் தேவை குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்றிரவு கட்டார் சென்றுள்ளனர்.
இதேவேளை, நீண்டகாலமாக நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்து வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கலந்துரையாடினார்.
தற்போது நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் போது அதற்கான முழுத் தொகையும் செலுத்தப்படும் வரை எரிபொருளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வருவதில்லை.