மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 1 முதல் 30 யூனிட் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணமான 30 ரூபாயை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது.
ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை ரூபாவால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை 1100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 300 ரூபாவை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், தற்போது 4 ரூபா 85 சதமாக உள்ள ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை 31 முதல் 60 அலகுகள் வரை 12 ரூபா 50 சத்தத்தினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், 10 ரூபா கட்டண திருத்தத்தை மாத்திரமே பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.