இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெண்களின் குடும்பப் பின்னணிப் பதிவை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்ற பெண்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த குடும்ப பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கூற்றுப்படி, பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான பல சர்வதேச அறிக்கைகள் பெண்களின் உரிமைகளைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
மேலும், சில சந்தர்ப்பங்களில், அறிக்கைக்கு தகுதிகள் பெற்றிருந்தாலும், சில அதிகாரிகள் பல்வேறு காரணங்களால் அறிக்கையை தாமதப்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க தகுதியற்ற பெண்களும் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைவாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெண்களின் குடும்பப் பின்னணி பதிவை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.