பம்பலப்பிட்டி சந்தியில் பயணித்த முச்சக்கர வண்டியில் தீ பரவியுள்ளது. முச்சக்கரவண்டியின் எஞ்சின் பகுதியில் தீ பரவி முச்சக்கரவண்டிக்குள் பரவி ஸ்தலத்திலேயே எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாரும் அருகில் இருந்த மக்களும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்ததாக குரு டிவியின் செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியினுள் ஏற்பட்ட எரிபொருளினுடைய கசிவின் காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்கள் . தீ பரவும் போது முச்சக்கர வண்டியின் சாரதி மாத்திரமே வாகனத்திற்குள் இருந்ததாக குரு டிவியின் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.