நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிம அலுவலகம், கம்பஹா மற்றும் அநுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழக்கிழமைகளில் உரிமம் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் எதிர்வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் காலை வந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலுவலக வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 0707677877 (வாகனப் பதிவு மற்றும் இடமாற்றம்) மற்றும் 0707677977 (ஓட்டுநர் உரிமம்) என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு, அலுவலக நேரத்திற்குப் பிறகு Whatsapp / Viber / SMS மூலம் திணைக்களத்தின் சேவைகளைப் பெறலாம்.