நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தூதரக சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, ஜூன் 30, 2022 முதல் ஜூலை 10, 2022 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும்.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் மேற்கண்ட தினங்களில் இயங்கும்.
அவசர தேவைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல்களை தொடர்பு கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு மேலும் பொதுமக்களுக்கு தெரிவிக்கிறதுதூதரக விவகாரங்கள் பிரிவு – கொழும்பு – consular@mfa.gov.lk
பிராந்திய துணைத் தூதரகம் – யாழ்ப்பாணம்- jaffna.consular@mfa.gov.lk
பிராந்திய துணைத் தூதரகம் – மாத்தறை- matara.consular@mfa.gov.lk
பிராந்திய துணைத் தூதரகம் – கண்டி- kandy.consular@mfa.gov.lk
பிராந்திய துணைத் தூதரகம் – திருகோணமலை – trincomalee.consular@mfa.gov.lk
பிராந்திய துணைத் தூதரகம் – குருநாகல் – kurunegala.consular@mfa.gov.lk