இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை 22% திருத்தியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் கட்டணமும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், 40 வீத பஸ் கட்டண உயர்வாக இருக்கும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.