முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவசர சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலையில் நாம் வினவிய போதிலும் அவ்வாறான தகவல்களை வழங்க முடியாது என அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியீட்டாளர் தகவலை மறைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் இல்லை என வைத்தியசாலை தெரிவிக்கவில்லை என்பதுடன் எமக்கு கிடைத்த தகவல் உண்மை என்பது தெளிவாகின்றது.
எமக்கு கிடைத்த தகவலின்படி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் விசேட பிரமுகர் அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.