ருமேனியாவில் தொழில்வாய்ப்புக்காக புறப்படுபவர்களுக்கு தனியான பயிற்சி முறையை தயார் செய்யுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். ருமேனியாவில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக Zoom தொழில்நுட்பம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக மாதாந்தம் 500 மில்லியன் டொலர்களை சட்டரீதியாக இலங்கைக்கு அனுப்பினால் டொலர் நெருக்கடியினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.