நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பும் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை கொண்டு வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஒரு நாளைக்கு சராசரியாக 105 விமானங்கள்நாட்டிற்கு வந்து புறப்பட்டுச் செல்வதாக விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
அதன்படி, தினமும் குறைந்தது 10,000 பயணிகள் நாட்டிலிருந்து செல்கின்றனர்.
எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக பணியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இருப்பு 800 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.