தற்போதைய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே சைக்கிள் மற்றும் சைக்கிள் உதிரி பாகங்கள் பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்ததினால் சைக்கிளினுடைய விலையும் அதிகரித்து காணப்படுகின்றது.
சாதாரண துவிச்சக்கர வண்டியின் விலை 50,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், புதிய மாடல்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய துவிச்சக்கர வண்டியின் விலை 100,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் துவிச்சக்கர வண்டி விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நெருக்கடியால் துவிச்சக்கரவண்டி பாவனையில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் தற்போது மீண்டும் சைக்கிள்களை பயன்படுத்துவதால் துவிச்சக்கர வண்டி உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ட்யூப், செயின், டயர் போன்ற சைக்கிள் அணிகலன்களின் விலையும் அதிகரித்துள்ளது.