நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்னும் இயங்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மக்கள் தமது போக்குவரத்துத் தேவைகளை இரயில்கள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையால் விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களே இதன்போது பணிக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் விமான எரிபொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளது இதன்படி, இலங்கை வருவதற்கும் புறப்படுவதற்கும் எரிபொருளை கொண்டு வருமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
இத்தகைய பின்னணியில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் கதி என்ன? .
தனியார் பஸ் தொழிலும் கடும் நெருக்கடியில் உள்ளது. எரிபொருள் இல்லாவிட்டாலும், கட்டணம் உயர்த்தப்பட்டாலும், தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா அவர்கள் கூறுகையில் இதுவரை போதிய அளவு டீசல் கையிருப்பு வரவில்லை என்றார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதற்கு மக்கள் அதிக நாட்டம் காட்டினாலும் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. துவிச்சக்கர வண்டிகளின் விலை 35,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக சைக்கிள் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.