ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இன்று (02) சவூதி அரேபியா செல்லவுள்ளார்.
இச்சந்திப்பில், இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அது இலங்கையின் அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கை – சவூதி அரேபியா இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து சவுதி தூதரகத்தின் பொறுப்பதிகாரி இலங்கைக்கு இந்த விடயத்தில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.