நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.