இந்திய கடனுதவியின் கீழ் நாட்டுக்கு வழங்கப்படும் முதலாவது யூரியா உரம் எதிர்வரும் 10ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது.
இதன்படி, 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தைப் பெறவுள்ளது.
ஓமன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பலுக்கு உர இருப்புக்களை ஏற்றும் பணி நேற்று (02) இரவு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் போது 50 கிலோ யூரியா உரம் மூட்டை 15,000 ரூபாவிற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், விலை கொடுக்க முடியாததால், ஒரு மூட்டை உரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆனால் இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் தற்போது சந்தையில் 50 கிலோ யூரியா உர மூட்டை 40,000 முதல் 45,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.