தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது நிதானமாகவும் நல்ல புரிதலுடனும் செயற்படுவது முக்கியம் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் இரவு பகலாக தமது சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக கடுமையாக உழைத்து வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களை தாக்குவது தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவும் கருத்து தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒருவரை கட்டுப்படுத்தவே உரிய அதிகாரி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.