துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு திரும்புவதற்கு தயாராகி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான ஏ-330-300 ஏர்பஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
TK-6050 என்ற இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்ல தயாராக இருந்த நிலையில்.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பலத்த காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது, இந்த விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமான நிலைய நடத்துனர்களால், உரிய முறையில் சம்பந்தப்பட்ட விமானத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் கண்டெய்னர் விமானத்தை சென்று அதன் எஞ்சினுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் விமானத்தின் வலது புறத்தில் உள்ள 02ம் இலக்க இயந்திரம் சேதமடைந்துள்ளது.
எவ்வாறாயினும், விமானத்தின் சேதமடைந்த இயந்திரங்களை மீட்பதற்கோ அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கோ தேவையான நடவடிக்கைகளை துருக்கி விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.