கொழும்பு பொரளை பகுதியில் எரிபொருள் நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (05) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 60 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்தபோதே அவர் மரணித்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.