05 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யூரியா ஏற்றிச் செல்லும் உரக்கப்பல் ஒன்று எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சர் இந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மாற்றியமைப்பதற்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கருத்துத் தெரிவித்தார்.