வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும் போது, முன்னர் வெளிநாட்டில் பணிபுரியும் போது நாட்டிற்கு சரியான முறையின் மூலம் பணத்தினை அனுப்பியுள்ளார்களா என்பதை சரிபார்க்கப்பட்டு அவ்வாறு சடடரீதியாக அனுப்பியவர்களே மீண்டும் வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.இவ்வாறான சட்டம் ஒன்றினை மிக விரைவில் உருவாக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் உள்நாட்டு தாதியர் வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் யுவதிகள் குழுவிற்கு நேற்று தொழிலாளர் அமைச்சில் விமான பயணச்சீட்டுகளை வழங்கிவைக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணியாற்றியதன் பின்னர் நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனத்தை எடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விமான நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் அதிகரிக்கப்படும் எனவும், வீடுகளை நிர்மாணித்தல், சுயமாக ஆரம்பிப்பது உள்ளிட்ட ஏனைய சலுகைகளை வழங்குவதில் நாட்டுக்கு கிடைக்கும் டொலர் தொகைக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இன்று மூன்று பெண்கள் தாதியர் பணிக்காக வெளியேறவுள்ளனர், தாதியர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் 38 பேர் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் 500 தாதி உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இராஜதந்திர உத்தியோகத்தர்கள் என்ற வகையில் வெளிநாட்டில் பணியாற்றும் போது தமது கௌரவத்தையும் நாட்டின் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் அந்த மாநிலத்தில் இருந்து எமது நாட்டுக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புக்களை இலகுவாக அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.