கூடிய விரைவில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு அராஜகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.