தானும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளைப் பெறுவதற்கு கடனுதவி வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இடைநிறுத்தப்பட்டுள்ள Aeroflot விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.