பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளன.
அந்த நாடுகளின் பயண ஆலோசனைகளை புதுப்பித்து இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இலங்கையில் மின்வெட்டு, போராட்டம், திடீர் சாலை மறியல், போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மேலும் அறிவித்துள்ளன.