3 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பானிய தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அங்கு ஜப்பானிய தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகள் குறித்து ஜப்பான் தூதரகத்திற்கு தாம் முன்னர் அறிவித்துள்ளதாகவும்,
ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து இந்த மாதம் 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் ஜப்பானிய தூதுவர் மேலும் தெரிவித்திருந்தார்.