எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார்.
இதன்படி, ரயில் கட்டணத்தை தற்போதைய பஸ் கட்டணத்தில் பாதிக்கும் குறைவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் பத்து அல்லது இருபது ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.