எரிபொருள் விலை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோப் குழுவிடம் நேற்றைய தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் தம்மையும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளையும் கோப் குழு முன்னிலையில் அழைத்து விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மக்களை ஏமாற்றும் வகையில் ஏதாவது அறிக்கை வெளியிட்டாரா என்பதை கண்டறியுமாறு கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்திடம் அமைச்சர் கோரியுள்ளார்.
எரிபொருள் விலை மற்றும் அதன் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பில் கோப் குழு முன்னிலையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று குற்றஞ்சாட்டினார் இதனைத் தொடர்ந்த அமைச்சர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.