ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜப்பானின் நாராவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் 40 வயதுடைய நாட்டின் கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் அதிகாரி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
67 வயதான ஷின்சோ அபே ஜப்பானின் பிரதமராக 2006 முதல் 2007 வரையும், மீண்டும் 2012 முதல் 2020 வரையும் பதவி வகித்து, அதிக காலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றவராவார்.