மேல் மாகாணத்தின் 07 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் காலி முகத்திடலில் உள்ள “கோத்தா கோ கிராம” போராட்ட மைதானத்திற்கு மக்கள் வந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக கண்டி மற்றும் காலியில் இருந்து கொழும்புக்கு ரயில்களை இயக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நிலையங்களில் திரண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக வர முடியாத சிலர் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு பேரணியாக செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.