நூருள் ஹுதா உமர்
மாளிகைக்காடு சந்தியில் இருந்து கல்முனை நகர் வரையிலான கோத்தா ஹோ ஹோம் போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த போராட்டத்தில் துவிசக்கர பேரணியும் நடைபெற்றது. கல்முனை வரை சென்ற போராட்டக்காரர்கள் இதன்போது,
டீசல் இல்லை – கல்வி இல்லை, பெற்றோல் இல்லை – டீசல் இல்லை, வாழ்க்கை செலவு வான் அளவு தொழில் இல்லை, கொள்ளையிட்ட டொலர் இல்லை கொள்ளையடித்த டொலர் இல்லை, வலை இல்லை, வயிற்றுப் பாசி. பணம் எங்கே கொள்ளை இலாபம் எண்ணெய் இல்லை சமையலுக்கு கேஸ் இல்லை சமையலுக்கு. எங்கள் பணம் கேஸ் இல்லை. கோட்ட ரணில் – நல்ல துக்கம் நல்ல துக்கம் ரணில் கோட்ட நாட்டை வளைத்து -எங்கள் வளம்.கோட்டா ரணில் வீட்டுக்குப்பே, ஆட்சி வேண்டும் – மக்களுக்கு கோட்ட ரணில் – பங்கு வேண்டாம் கோட்ட ரணில் – சோடி வேண்டாம் மீனும் இல்லை வலையும் இல்லை என்று கோஷம் எழுப்பினர்.
இதே போன்று ஐக்கிய மக்கள் சக்தி கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றசாக் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கல்முனை தொகுதி ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று சாய்ந்தமருது முடிவில் இருந்து ஆம்பித்து கல்முனை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி கோத்தா மற்றும் பிரதமருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.