தற்போது கொழும்பு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்களுக்கு ஹோட்டல் வளாகத்திற்கு வர ஹோட்டல் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு ஆளாகும் போராட்டக்காரர்களுக்கு குளிர்ந்த நீரை அருந்தி முகத்தைக் கழுவுவதற்கு அங்கு பணியாற்றும் ஹோட்டல் சமையல்காரர்களும் ஊழியர்களும் உதவிவருகின்றனர்.