கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மூலம் சிலர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் துறைமுக மாஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடற்படைக்கு சொந்தமான கஜபா மற்றும் சித்துரல ஆகிய கப்பல்களில் சிலர் வெளியேறியதாக கொழும்பு துறைமுக மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கப்பல் எங்கு சென்றது, யார், என்ன கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் செய்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.
அந்த காட்சிகளின்படி, பல லக்கேஜ்களை இழுத்துக்கொண்டு அவசரமாக பயணிக்கும் ஒரு கும்பல் எப்படி மிக வேகமாக ஏறியது என்பது தெரிகிறது.
அந்த காட்சி, அங்கு பயணிக்க தயாராகி வருபவர் யார், உரிய பொட்டிகளில் என்ன கொண்டு செல்லப்படுகின்றது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.