விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சுற்றி தற்போது கடும் வெப்பமான சூழல் நிலவுகிறது.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு விமான நிலையத்தினூடாக செல்ல இடமளிக்க மாட்டோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் பரிசோதிக்கப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.