சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.