போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேச்சை எம்.பி.யாக பணியாற்ற தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களின் மற்றும் மதத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.