கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பல நகரங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் இன்னும் நீண்ட எரிபொருள் வரிசைகள் உள்ளன. நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படாவிட்டாலும் பலர் வரிசையில் நின்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், லங்கா ஐஓசி நிறுவனம் இன்று தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, திருகோணமலை முனையத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படுவதாக ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் வரை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அருகே வரிசைகள் நீண்டன. சில எரிபொருள் வரிசைகள் பல கிலோமீற்றர்களுக்கு பரவியிருந்ததாக குரு டிவியின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நேற்றும் இன்றும் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லங்கா ஐஓசி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. எவ்வாறாயினும், லங்கா ஐஓசி நிறுவனம் இன்று தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளது.