கம்பளை, கச்சமலை வீடன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
கம்பளை இருந்து புஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.
விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணம் செய்தனர்.
இதில் உயிரிழந்த இருவர் பேருந்தின் கதவில் தொங்கிய நிலையில், பேருந்து சாலையில் இருந்து விலகி பக்கவாட்டு சுவரில் சாய்ந்தபோது அதில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.
விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு பின்னர் பேருந்திற்கு தீ வைத்துள்ளனர்.
தீயில் பேருந்து முற்றிலும் எரிந்துள்ளது.