சர்வதேச ஊடகமொன்றுக்கு சபாநாயகர் ஒரு இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை எனவும் அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்திசேவையின் கலந்துரையாடலில் சபாநாயகர் இதனை உறுதிப்படுத்தினார்.
எதிர்வரும் புதன்கிழமைக்குள் தாம் நாடு திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்தியா சென்றாரா என சபாநாயகரிடம் பிபிசி செய்தியாளர் வினவியதற்கு, பாதுகாப்பு காரணங்களால் இது தொடர்பில் மேலதிக விடயங்கள் எதனையும் தெளிவுபடுத்த முடியாது என சபாநாயகர் பதிலளித்துள்ளார்.