ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் தான் தங்கியிருப்பதாகவும், பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்த கருத்து பிழையானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் சபாநாயகர் தெரிவிக்கையில் , ஜனாதிபதி தம்முடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாதுகாப்பு படைகளின் தலைவர் உட்பட அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.