நாடாளுமன்றத்தை எதிர்வரும் 15ஆம் திகதி கூட்டுவதற்கு பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அழைப்பதற்கும், 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாளைய தினம் அல்லது இல்லாவிட்டாலும் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் தானும் அமைச்சரவையும் நாளை பதவி விலகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை (12) பிற்பகல் 2.30 மணிக்கு போராட்டக் குழுவினருடன் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளனர்.
அதற்காக போராட்டக்குழு தலைவர்கள் என்று கூறப்படும் 25 பேர் இதில் பங்கேற்க உள்ளனர்.