முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தமை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எமிரேட்ஸ் விமானத்தின் ஊடக டுபாய் செல்வதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. .
எவ்வாறாயினும், இன்று காலை டுபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வருவதை அறிந்த பயணிகள் குழுவொன்று விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில்,உயரதிகாரிகளுக்கு பணம் கொடுத்து விமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் “சில்க் ரோடு” முனையத்தில் பணியிலிருந்து விலக குடிவரவு அதிகாரிகளும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனைத்து உண்மைகளின்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று அதிகாலைநாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.